Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

மலையன்குளம் இசக்கியம்மன் துதி!



மலையன்குளம் இசக்கியம்மன் துதி!

அல்லல் அகற்றி அறிவை பெருக்கி
வள்ளல் மகனாய் வாழ வைக்கும்
தாயே நீலி போற்றி !
துன்பம் நீக்கி துணிவை தந்து
என்றும் எனக்கு துணை நிற்கும்
தாயே நீலி போற்றி !
வன்மம் நீக்கி வளமை தந்து
என் வாழ்வின் வழித்துணையாய் வருபவளே
தாயே நீலி போற்றி !
காமம் அறுத்து கடமை உணர்த்தி
காலமெல்லாம் என்னை காக்கும்
தாயே நீலி போற்றி !
கோபம் நீக்கி குணமது தந்து
என் குடும்பமெல்லாம் காக்கும்
தாயே நீலி போற்றி !
மடமை நீக்கி மாயையென உணரச்செய்து
மங்களம் வாழ்வில் தந்தருள் என்
தாயே நீலி போற்றி !
எனை எவர் ஏசிடினும் பேசிடினும்
என் மனம் கலங்காமல் காக்கும்
தாயே நீலி போற்றி !
தாயினும் சிறந் தென்னை காக்கும்
என் தாயே மலையன்குளம் இசக்கியம்மனே போற்றி போற்றி !
________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

0 comments:

Post a Comment