Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

இசக்கியம்மன் போற்றி


இசக்கியம்மன் போற்றி 



கல்யாணி சுந்தரி கைலை நாதன் பாகத்துறை நீலி
நாதம் கேட்டு நடனமாடிய நாயகி
இருள் சூழ் நேரம் நாயும் நரியும் தனியே உளற
பேயும் பிசாசும் இவள் பின் நிற்க
நீலி என இவளும் உருவே மாறி ;
காண்போர் கலங்க கள்ளி பழ கண்கள்
பார்ப்போர் பதற பாம்பென சடைகள்
சிவந்த முகம் செந்நாரை அலகென சிவநீலி பற்கள்
மாண்டவர் மண்டையோடு இரு காதில் குண்டலம்
செந்நிற ஆடை மேனியில் புரள
விழுந்த நாவோ மார்பில் தவழ
ஆளுயர் அரவம் அறையில் பின்னி
காலில் சதங்கை கலியும் நடுங்க
சூலமும் வாழும் கைகளில் ஏந்தி
கள்ளி குழந்தை இடுப்பினில் இருக்க
காலமெல்லாம் எமை காக்கும் என் தாயே
மலையன்குளம் இசக்கியம்மனே போற்றி போற்றி !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

0 comments:

Post a Comment