Socialize

Search This Blog

Powered by Blogger.

Categories

எம்குல தெய்வமே மலையன்குளம் இசக்கியே சரணம்

எழுகடல் அழித்தும் ஈரேழுலகு அழித்தும் பருவத மெல்லாம் சிதைத்து காலனையும் அழைத்து வரும் வினையெல்லாம் வாளால் வெட்டி நாற்புறம் நின்...

அருள்மழை பொழிவாய் இசக்கியம்மா!


அருள்மழை பொழிவாய் இசக்கியம்மா!

அம்மையே சக்தியை அகிலமெல்லாம் நிலை அருள் நீலி தாயே !

உண்மையாய் மனதினில் உன்னையே பணிந்தேன்
ஒரு முறை நீ பாரம்மா !

எத்துன்பம் வந்திடினும் எவர் என்னை பழித்திடினும்
அன்னை எனை நீங்கிடாதே !

கறைபடிந்த உள்ளத்தான் காலத்தால் மாறினேன்
காப்பவள் நீ என்று நான் உணர்ந்தேன் !

ஈரேழுலகமும் நின்றாலும் தாயே சிவநீலி
என்கரம் பிடித்தே எனை நடத்துவாய் !

பார்தனில் வாழும்கால் பாவி எனை விலக்கிடாமல்
பாசமாய் நீ பாரம்மா !

அருள்மழை பொழிவாய் மலையன்குளம் நின்ற
சிவ நீலி இசக்கியம்மா !

ஓம் சக்தி !

________________________________________________________________________
மலையன்குளம் அருள்மிகு ஸ்ரீ இசக்கியம்மன்

( நீலிதாசன் )

0 comments:

Post a Comment